தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை சேதமடைந்தது. மேலும் மெயின் அருவி மற்றும் பெண்கள் குளிக்கும் அருவி மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக சீரமைத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிசாமி, ஒகேனக்கல், தர்மபுரி.