நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-14 15:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது. அதை பேரூராட்சி நிர்வாகம் அகற்றாமல் அப்படியே விட்டுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இறந்த தெருநாயை அகற்ற வேண்டும்.

-பச்சமுத்து, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்