தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பல நாட்கள் ஆகிறது. இதனால் மாணவர்கள் அதன் வழியே வெளியே வருகின்றனர். அந்த வழியாக மாணவர்கள் சாலைக்கு வரும்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
-செல்லம், பொம்மிடி, தர்மபுரி.