சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-08-11 16:47 GMT

ஓசூர் மாநகரில் பாகலூர் ரோடு சர்க்கிள், தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை ரோடு உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சாலைகளின் நடுவே மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் இடையூறாகவும், அச்சமூட்டும் விதத்திலும் உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன்பு சாலைகளில மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-பழனியப்பன், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்