தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்

Update: 2022-08-10 16:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் நெடுஞ்சாலையை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாணவிகளும், பேராசிரியர்களும் பயன்படுத்தாமல் நெடுஞ்சாலையை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.

-தண்டபானி, அங்கிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்