கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் அரசு பள்ளி எதிரே,வளைவு ஒன்றில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அந்த இடத்தில் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது , தடுப்பு தகடுகள் சேதமடைந்து அகன்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரும்பு தகடுகளை சீரமைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கூத்தாநல்லூர்.