தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிளப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதி சேறும், சகதியுமாக உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சேற்றில் நடந்து வரும் நிலை உள்ளது. எனவே பள்ளி முன்பு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேந்தன், பிளப்பநாயக்கனஅள்ளி, தர்மபுரி.