நாகை மாவட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி, பச்சைபிள்ளையார் கோவில் தெருவில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. . இந்நிலையில் அங்கு பன்றிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிக அளவில் பன்றிகள் திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.