கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை செய்து, சுவாமி கிரிவலம் வருவது வழக்கம். இதற்காக கிருஷ்ணகிரி மலையை சுற்றிலும் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில் இப்பாதை பராமரிக்காததாலும், கற்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களாலும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி கிரிவலம் செல்லாமல் கோவிலை மட்டும் சுற்றி வருகிறது. தற்போது கிரிவலம் செல்ல திட்டமிட்டுள்ளதால் இப்பாதையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-மணிகண்டன், கிருஷ்ணகிரி.