ஓசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரி, தேர்பேட்டை ஏரி உள்ளிட்ட ஏரிகளில் ஆகாயத்தாமரை அதிக அளவில் பரவி ஏரிகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் ஏரிகளிலுள்ள நீரும் குறைய வாய்ப்பு உள்ளது. ஏரிகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அகற்றினால் ஏரியில் மழைநீர் தேங்கி நிற்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜ், ஓசூர்.