கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்தையொட்டி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அரசு அலுவலர்கள், பயணிகள், பொதுமக்கள் என பலரும் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். எனவே பஸ் நிலையத்தையொட்டி உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டால் பயணிகளுக்கு பொழுது போக்க ஏதுவாக இருக்கும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் நகரின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு பூங்கா அமைக்கப்படுமா?
-பன்னீர், மத்தூர், கிருஷ்ணகிரி.