பயன்பாடு இல்லாத நூலக கட்டிடம்

Update: 2023-08-16 17:21 GMT

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் 1958-ம் ஆண்டு ஊராண்மை நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து பயன் இல்லாமல் குடியிருப்பு பகுதியில் கட்டிடம் உடைந்து வருகிறது. இந்த கட்டிடம் எந்த துறைக்கு சேர்ந்து என தெரியாமல் அதிகாரிகள் இடிக்க தாமதம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணி, சேலம்.

மேலும் செய்திகள்