வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

Update: 2023-08-06 16:57 GMT

சேலம் இரும்பாலை சர்க்கார் கொல்லப்பட்டி அருகே அரசு மருந்து கிடங்கு உள்ளது. இதன் அருகே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதியில் மர்மநபர்கள் மது குடித்து வருகின்றனர். எனவே பறிமுதல் வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

-ராஜாகிள்ளிவளவன், வட்ட முத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்