மதுபிரியர்களால் ஆபத்து

Update: 2023-07-19 16:50 GMT

சேலம் குரங்குசாவடி முதல் அண்ணா பூங்கா வரை ஈரடுக்கு மேம்பாலம் செல்கிறது. இரவு நேரத்தில் பாலத்தின் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். போதை தலைக்கு ஏறிய சிலர் பாட்டில்களை பாலத்தின் மேலிருந்து கீழேயும் தூக்கி வீசுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இதை தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

-ஜோசப், ஓமலூர்.

மேலும் செய்திகள்