கூடுதல் மின்விளக்குகள்

Update: 2023-06-07 17:01 GMT

சேலம் பச்சப்பட்டி ஆறுமுகநகர் முதல் கிராஸ் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல இந்த பகுதியில் குறைந்த அளவில் மின்விளக்குகள் உள்ளன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் இரவில் வெளியேவர தயங்குகின்றனர். இதனால் குற்றச்சம்பவம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-பாலாஜி, சேலம்.

மேலும் செய்திகள்