அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2023-06-07 14:25 GMT

பென்னாகரம் ஒன்றியம் மாதேஅள்ளி ஊராட்சி ராகவேந்திரா நகரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை, வடிகால் வசதி செய்துதரப்படவில்லை, குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் வருவதில்லை. இதனால் இங்கு குப்பைகள் குவிந்தும், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இரவில் தெருக்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் இதுவரை இல்லை. மாதேஅள்ளி ஊராட்சி மன்றத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஷ், ராகவேந்திரா நகர், மாதேஅள்ளி.

மேலும் செய்திகள்