ஆபத்தான கிணறு

Update: 2023-06-07 14:25 GMT

தர்மபுரி மாவட்டம் அத்திமுட்லுவில் இருந்து அகரம் செல்லும் வழியில் சாலையோரம் மண் சரிந்த நிலையில் கிணறு உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி, பால் வண்டி மற்றும் அகரம் அரசு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடந்து செல்கின்றன. இந்த கிணற்றுக்கு தடுப்புச் சுவர் கட்டுவதற்காக பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், அத்திமுட்லு.

மேலும் செய்திகள்