மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-04 15:08 GMT
பெங்களூரு கிரசெண்ட் சாலை பகுதியில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின்போது மரக்கிளைகள் முறிந்து அங்கு நிறுத்தி உள்ள கார்கள் மீது விழுந்தது. அந்த கிளைகள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்