சிவகாசி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?