கூடலூரில் இருந்து ஐந்து முனை சந்திப்பு வழியாக மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பகுதியில வழிகாட்டி பலகை எதுவும் இல்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் எந்த திசையில் செல்ல வேண்டும் என தெரியாமல் திணறி வருகின்றனர். எனவே அங்கு அனைத்து தகவல்களுடன் கூடிய வழிகாட்டி பலகை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.