ராஜாக்கமங்கலம் ஊராட்சி அலுவலகத்தின் முன்பதியில் பூதநாதசிவன் கோவிலின் தெப்பக்குளம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் கால்களை நனைத்தும், புனிதநீராடியும் செல்கின்றன. ஆனால், சமீபகாலமாக குளத்தில் மீன்கள் இறந்து தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், படித்துறைகளில் பாசிகள் படர்ந்து காணப்படுவதால் அங்கு வரும் பக்தர்கள் வழுக்கி விழுந்து படுகாயமடைகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் நலன்கருதி குளத்தை தூவாரி தூய்மை படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.