திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி நூம்பல் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் இருந்த சமயலறை பல மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மதிய சத்துணவு சமைக்க தேவையான சமயலறை இல்லாமல், மற்றொரு பள்ளியில் சமைத்து எடுத்துவரப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சமயலறை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.