ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2023-05-28 17:45 GMT

சேலம் சூரமங்கலத்தை அடுத்து போடிநாயக்கன்பட்டி ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரி முழுவதுமாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேறும், சகதியுமாக, ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து உள்ளது. மேலும் அருகே உள்ள பகுதிகளிலிருந்து கழிவுநீர் ஏரியில் கலப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆகாயத்தாமரைகளை அகற்றி ஏரியில் கழிவுநீர் கலக்காதவாறு தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சதீஷ், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்