பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2023-05-21 18:06 GMT

சேலம் சிவதாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள மைதானத்தில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி விடும். இதனால் பள்ளி மாணவர்கள் விளையாட முடியாமல் நிலை இருந்ததது. தற்போது இந்த மைதானத்தில் மண் கொட்டப்பட்டு பாதி மைதானம் மேடு படுத்தப்பட்டுள்ளன. இன்னும் முழுமையாக மேடுபடுத்தப்பட்டு பள்ளி திறப்பதற்குள்ளாக பள்ளி மாணவர்கள் விளையாடும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சிவா, சேலம்.

மேலும் செய்திகள்