தண்ணீரை வெளியேற்ற வேண்டும்

Update: 2023-05-10 17:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஒப்பதவாடி செல்லும் சாலையில் சின்ன பர்கூர் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை பெய்தால் 3 முதல் 4 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பழனி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்