கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையம் பகுதியில் பல மன நோயாளிகள் எப்பொழுதும் சுற்றித் திரிகின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் அவ்வப்போது எதையாவது வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இந்த மன நோயாளிகளை உறவினர்களும் மற்றவர்களும் மனநோயதளிகள் காப்பகத்தில் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் எப்பொழுதும் அழுக்கான உடைகளில் பஸ் நிலையத்தை சுற்றி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோபால், மத்தூர், கிருஷ்ணகிரி.