திறக்கப்படாத கட்டிடம்

Update: 2023-03-29 16:24 GMT

சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் பயன்பாட்டுக்கு வாகன நிறுத்த கட்டிடத்தை திறப்பார்களா?

-வேலுமணி, சேலம்.

மேலும் செய்திகள்