குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது

Update: 2023-03-19 16:58 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளது. இந்த எந்திரத்தில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பஸ்நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகண்டன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்