காவலர்கள் இல்லாத சோதனை சாவடி

Update: 2023-03-15 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் நாள்தோறும் இரு காவலர்கள் பணியமர்த்துப்பட்டு இரவு பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக முறையான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாமல் உள்ளதால் சோதனைசாவடி காவலர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் தற்போது இந்த சோதனை சாவடி பின்பகுதியில் சமூக விரோதிகள், மதுப்பிரியர்கள் மதுஅருந்தும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே மீண்டும் காவலர்களை அமைத்து முறையான சோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர்.

-ரிஷிகேஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்