ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

Update: 2023-03-12 17:04 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்- பென்னாகரம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஏரியூரின் மைய பகுதியில் உள்ள தார்சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஒரு மாதமாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்