விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-03-01 14:05 GMT


ஈரோடு அடுத்துள்ள சோலாரில் கரூர் மெயின் ரோட்டின் ஓரம் ஆங்காங்கே குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதில் தீயும் வைத்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டு ஓரம் குப்பை கொட்டுவதையும், அங்கு தீ வைப்பதையும் தடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்