ரெயில்வே பயணிகள் அவதி

Update: 2023-03-01 14:03 GMT


ஈரோடு ரெயில் நிலையம் முன்பு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். மேலும், ரெயில் நிலைய வளாகத்தில் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், துர்நாற்றத்தை தாங்க முடியாமல் கடும் அவதி அடைகிறார்கள். எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிவிட்டு, சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்