பயன்பாட்டுக்கு வருமா? குடிநீர் தொட்டி

Update: 2023-02-22 16:46 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்- மேச்சேரி பிரதான நெடுஞ்சாலையில் சின்னம்பள்ளி அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் மோட்டார் உடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வீணாகி வருகிறது. எனவே இந்த நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அஞ்சலா தேவி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்