உடைந்த இருக்கைகள்

Update: 2023-02-22 12:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புதுப்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் தரம் இல்லாமல் இருந்த காரணத்தினால் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த நிழற்குடையை பயன்படுத்தும் முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்