வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா ?

Update: 2023-02-19 17:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலையில் வேலம்பட்டி மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. இந்த வேக தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமலல் உள்ளது. இதனால் புதியதாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். இந்த வேக தடைகளில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வேகத்தடையில் வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்