காட்சிப் பொருளான டிஜிட்டல் போர்டு

Update: 2022-07-20 10:24 GMT
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டது. இதை பராமரிக்காததால் நீண்ட காலமாக பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. எனவே கொரோனா விழிப்புணர்வு, செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பயன்படும் வகையில் இதை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்