பயன்பாடு இல்லாத அரசு கட்டிடம்

Update: 2023-02-12 16:49 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தக்காளி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட இதர அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையம் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இவை விவசாயிகளுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதிகாரிகளின் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதி புதர்மண்டியும், உபகரணங்கள் துருப்பிடித்தும் காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விவசாயிகள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அஸ்வின், தர்மபுரி.

மேலும் செய்திகள்