கம்பிவேலி அமைக்க கோரிக்கை

Update: 2023-02-12 16:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் மிகவும் பழமையான ஏரி, சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. ஏரியை சுற்றிலும் பக்கவாட்டில் விபத்து ஏற்படாமல் இருக்க இரும்பிலான தடுப்பு பலகைகளை பொருத்தி உள்ளனர். அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஏரியை சுற்றி சுமார் 5 அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைத்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இதனை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.

-சீனிவாசன், முகுலப்பள்ளி, ஓசூர்.

மேலும் செய்திகள்