பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்

Update: 2026-06-28 11:15 GMT

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் அனைத்தும் மேம்பாலம் வழியாக பைபாஸ் சாலையில் நேரடியாகச் சென்று விடுகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி பஸ்கள் பால்பண்ணை பகுதிக்குக் கீழே வராமல் செல்வதால் அரியமங்கலம், காட்டூர் மற்றும் பால்பண்ணையை சுற்றியுள்ள பொதுமக்கள் சென்னை செல்லும் பஸ்களை பிடிக்க நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பால்பண்ணையிலிருந்து சென்னை செல்லும் சர்வீஸ் ரோடு பைபாஸ் சாலையில் இணையும் இடத்தில் பஸ் நிறுத்தம் அமைத்து, சென்னை செல்லும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்