விருதுநகர் மாவட்டம் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாலிபர்கள் ஆபத்தை உணராமல் தங்களது மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் எதிரே பயணிக்கும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.