சென்னை அடையார், ருக்மணி நகரில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகளை இடித்து, மறுசீரமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணியின்போது, அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் சிதலமடைந்து அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அதன் அருகே வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.