கடமலைக்குண்டு கிராம பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. அதோடு இவை, சாலையோரங்களிலேயே மறைந்து இருந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளை துரத்திச்சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.