நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-19 17:47 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் ெதருநாய் மற்றும் பூனைகளை அகற்றாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் விபத்தில் உயிரிழக்கும் பிராணிகளின் மீது மென்மேலும் வாகனங்கள் ஏறி செல்வதால் உடல்கள் சிதறி சாலையில் பரவி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஏற்படும் விபத்துகளில் சிக்கும் பிராணிகளின் உடல்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

-குமார், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்