ஆக்கிரமிப்பில் நினைவுச்சின்னம்

Update: 2023-01-25 17:47 GMT

சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே மகாத்மா காந்தி வந்து சென்றதன் நினைவாக "சத்திய சோதனை" புத்தக வடிவிலான நினைவுச் சின்னம் பல ஆண்டுகளாக ஒரு வரலாற்று சின்னமாக இருந்தது. ஆனால் தற்போது "சத்திய சோதனை" புத்தக வடிவிலான நினைவுச் சின்னம் மறைத்து கடை உள்ளது. ஒரு வரலாற்று சின்னம் முற்றிலும் மறைக்கப்பட்டது கவலையாக இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூபதி, சேலம்.

மேலும் செய்திகள்