நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-01-25 17:43 GMT

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சைக்கிள் மற்றும் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகளை அருகில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் மற்ற பள்ளிகளின் மாணவர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியன், நங்கவள்ளி, சேலம்.

மேலும் செய்திகள்