பாதியில் நிற்கும் அரசு கட்டிடம்

Update: 2022-07-19 11:01 GMT

சேலம்  வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டுவதற்காக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணி நிறைவடையாமல் அப்படியே பாதியில் நிற்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊராட்சி அலுவலக பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜகிள்ளிவளவன், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்