கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. தினமும் 5 முதல் 10 பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சாலைகளின் குறுக்கே இந்த தெருநாய்கள் ஓடி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. எனவே தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பா, தேன்கனிக்கோட்டை.