செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-07 13:57 GMT


தஞ்சை-நாகை சாலையில் வாண்டையார் தொழிற்பயிற்சி பள்ளி அருகே உள்ள மின் கம்பத்தில் செடிகள் படர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மின் கசிவும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்