சந்தையில் அதிக கட்டணம்

Update: 2022-11-27 13:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வாரந்தோறும் மற்றும் தினசரி சந்தை இயங்கி வருகிறது. சந்தையில் பேரூராட்சி அதிகாரிகள் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூல் செய்ய வேண்டும்.

-முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்