நாய் தொல்லை

Update: 2022-11-23 06:26 GMT


பெருந்துறை, குன்னத்தூர் சாலையில் உள்ள பெருந்துறை பெண்கள் பள்ளிக்கூடம் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள், மாணவர்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்